சங்கீத நினைவலைகள்
எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களின் இசை அனுபவம் அவரின் பல சிறுகதைகளிலும், மோகமுள்ளிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் 'கி.ரா.'வின் இசை அனுபவம் அவரின் சிறுகதைகளில் வெளிப்படவில்லையே என்ற ஆதங்கம் 'கி.ரா.'வின் ரசிகர்களிடம் உண்டு. கி.ரா.வின் இசை அனுபவம் அனைத்தும் அவரின் பல கட்டுரைகளில் பதிவாகியுள்ளது. கி.ரா. முறைப்படி குரு மூலம் தன் நண்பர் கு. அழகிரிசாமியுடன் சேர்ந்து கர்நாடக சங்கீதம் பயின்றவர். கி.ரா. சிறந்த இசை ரசிகர். கி.ரா.வின் இசை ஞானத்தை "சங்கீத நினைவலைகள்" என்ற இந்த நூலின் மூலம் வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். கி.ரா.வின் நெருங்கிய நண்பரும் ரசிகமணி டி.கே.சி.யின் வழித் தோன்றலுமான தீப.நடராஜன் அவர்களின் முன்னுரை இந்நூலுக்கு அணி சேர்க்கிறது. 'இசை' பற்றிய இவ்வரியநூலை வெளியிடுவதை அன்னம் கௌரவமாகக் கருதுகிறது.